பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவியப் பாவை




கனிதரு வாழைத் தோட்டம தென்பார்
கம்பரும் பிறரும் அதன்வழி என்பார்
நனிமிகு மகிழ்ச்சி மனமதில் ஆடும்
நலிவுகள் தளர்வுகள் நம்மைவிட் டோடும்
—சாற்றி
அகம்புறம் கலியுடன் நற்றிணை சேரர்
அடல்பகர் பத்தொடு ஐங்குறு நூறு
தகும்பரி பாடல் குறுந்தொகை எட்டு
தண்டமிழ்க் காப்பியம் இவைஎலாம் தொட்டுச்
—சாற்றி

22