பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 369



"அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்

பிறன்போல நோக்கப் படும்"

(1047)

என்பது குறள்.

கயமையின் காழ்ப்பு!

னிதன் ஒரு விசித்திரமான பிறவி. மனிதப்பிறவி மற்ற உயிர்ப்பிறப்புக்களைவிட உயரியது; அறிவொடு தொடர்புடையது; ஆள் வினையுடையது; நெறிப்படுத்தப் பெறுவது. ஆயினும், மனிதனின் விழுமிய கருவிகளுள் தலையாயதாகிய உள்ளம் ஒழுங்காக இருந்தால் தான் எதுவும் சீராக அமையும். உள்ளமோ ஒரு தன்மையுடையதல்ல. ஆயினும் ஒழுங்குபடுத்திக் கொள்ளுதல் மனிதன் செய்து கொள்ளக்கூடிய அன்றாடக் கடமை. அஃது ஒரு பொழுது இருந்ததைப் போல பிறிதொரு பொழுது இருப்பதில்லை. உள்ளத்திற்குத் தற்சார்பும் தன்முனைப்பும் இயற்கையிலே உண்டு. அதனை மாற்றிச் செழுமைப்படுத்திக் கொள்வது மனிதனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் உள்ளமும் அவனையே முதன்மைப்படுத்துகிறது. அதனாலேயே அழுக்காறும் ஆணவமும் தோன்றுகின்றன. ஒரு மனிதன் தனது உள்ளம் தன்னை முதன்மைப்படுத்துவது தனக்கு நல்லதல்ல என்பதை முதலில் உணரவேண்டும். அதற்கு மாறாகத் தமது உள்ளத்தை, மற்றவர்களை முதன்மைப்படுத்தப் பழக்க வேண்டும். இங்ஙனம் பழக்கிக்கொள்பவர்கள் நல்லவர்களாக வாழ்வர்; அவர்களும் வாழ்வர்; மற்றவர்களுக்கும் வாழ்வு அளிப்பர். அங்ஙனமின்றித் தன்னையே மையமாகக் கொண்டு எண்ணி வாழ்பவர்கள் தங்களையும் கெடுத்துக்கொள்கிறார்கள். மற்றவர்களுக்கும் கேடு செய்கிறார்கள். இவர்களே கீழ்மக்கள்.

கீழ்மக்கள் மனித உருவில் நடமாடினாலும் அவர்கள் அவர்களுடைய பிறவிக்குணம் ஆங்காரமும்

தி.24.