பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

119


சேர்க்க வேண்டும். பெண்களை விளம்பரப் பொருளாகக் கொச்சைப் படுத்துவதைக் கண்டு கொதித்து எழவேண்டும்.

பெண் பெருமைக்கு உரியவள்; பேணத் தக்கவள்; போற்றத் தக்கவள் என்ற மனப்போக்கு சமுதாயத்தில் உண்டாக வேண்டும். வாழ்வியலில், பெண்ணின் பெருமைக்கு எதிராக உள்ள சமுதாய விதிகளில் மாற்றம் காண வேண்டும்.

சராசரியாக வளர்ந்தவர்கள் கூட, கடைப்பிடிக்க முடியாத விதிகள், ஒழுக்க நெறிகள் வற்புறுத்தப் பெறுவதால், ஒழுக்கக் கேடுகளே தோன்றுகின்றன. பெண்ணியலுக்கு ஏற்ப நிலவும் பழந்தமிழ் நெறி, புத்துயிர் பெறவேண்டும்.

இப்பெண்டிர் குலம் நாட்டின் நாகரிகத்திற்கு அரண் செய்யவேண்டும். நாட்டில் மலிந்துள்ள தீமைகளைக் களைய, அவர்கள் அன்பின் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும்.

பெண்டிர்கள் வாழும் திருநாடாக, பாரதம் மலர்தல் வேண்டும்! “பெண்டிரும் உண்டுகொல்!” என்ற கண்ணகியின் கேள்விக்கு விடை கண்டாக வேண்டும்.

“சான்றோரும் உண்டு கொல்?”

கோவலன் கொல்லப்பட்டான்; கள்வன் என்று பழி சுமத்திக் கொல்லப்பட்டான். யாரால் கோவலன் கொல்லப் பட்டான்? நாடோடிகளால் அல்ல. நாடாளும் அரசனால் கொல்லப்பட்டான்!

கண்ணகி ஆற்றாது அலமந்து அழுகிறாள்! ஏன்? கணவனை இழந்த துன்பத்திற்காக அல்ல! கணவனை இழந்த துன்பம் கண்ணகியின் எழுச்சிக்குக் காரணமாய் அமைந்தது. அவ்வளவுதான்! பின் கண்ணகியின் வெகுளலுக்கு யாது காரணம்?

கோவலனைக் கொன்ற அரசு, பாதுகாப்புத் தர வேண்டிய நாடாளும் அரசு; நாட்டில் கள்வர்கள்