சிலம்பு நெறி
129
நிலையாமை உணர்வு அறம் செய்தற்குத் தூண்டு கோலேயன்றி, எதிர்காலச் சிந்தனைகளை, திட்டங்களை இழப்பதற்கன்று. இத்தகு உயரிய கருத்தினைச் செங்குட்டுவனிடம் மாடல மறையோன் கூறுவதாக சிலப்பதிகாரம் உணர்த்துகின்றது.
“நாளைச் செய்குவம் அறமெனின் இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்
இதுவென வரைந்து வாழுநா ளுணர்ந்தோர்
முதுநீர் உலகில் முழுவதுமில்லை.”
இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்ற, வெளிப்படையான காரணங்கள் மூன்றைக் குறிக்கின்றார்.
“அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற் றாவதூ உம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்து ஊட்டும் என்பதூ உம்”
காரணங்களாகும். இம்மூன்றனுள் வாழ்வியலுக்கு முதலாக அமைந்து மிகுந்த விவாதத்திற்கும் உரியதாகிறது ஊழ்.
ஊழ் என்பது என்ன? உயிர் நிலையானது; தோற்றம், அழிவு இல்லாதது. அறியத்தக்கது செயல்கள் செய்யும் இயற்கையினது. உயிர், பிறத்தல் - இறத்தல் என்ற சொற்கள், உடல் மாற்றங்களைக் குறிக்குமே தவிர, உயிரைக் குறிப்பனவாகா.
உயிர்க்கு, கண்ணால் காணப்பெறும் பருவுடலன்றி நுண்ணுடல் ஒன்று உண்டு. உடலியக்கத்தை இயக்குவிக்கும் மனம், புத்தி, சித்தம் ஆகிய அறிகருவிகள் நுண்ணுடலைச் சார்ந்தவை. உயிரின் மனம், புத்தி, சித்தங்களில் நிகழும்