162
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பெட்டமாக இருந்தாள் என்பதை இளங்கோவடிகள், கோவலன் வாயிலாக.
“மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே! கரும்பே! தேனே!
அரும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ!
யாழிடைப் பிறவா இசையே என்கோ!
தாழிருங் கூந்தல் தையாள்! நின்னை.”
என்று, பாராட்டி மகிழ்கிறார்! இதிலிருந்தே கண்ணகியின் சிறப்பை உணரமுடிகிறது.
அப்படியானால், ஏன் கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்தான்? என்ற வினாத் தோன்றும். பலர் அவரவர், சிந்தனைப் போக்கிற்குத் தகுந்தவாறு விடை சொல்கின்றனர்.
“கண்ணகியிடம் மாதவிக்கிருந்த கவர்ச்சியில்லை; கோவலன் கலைஞன் கண்ணகியிடம் கலையுணர்வு இல்லை; கலை இல்லை” என்றெல்லாம் சொல்கின்றனர். இவையனைத்தும் பொய். கோவலன் இயல்பிலேயே மகளிர் ஒழுக்கத்தில் முறை பிறழ்ந்தவன். அவனுடைய மகளிர் ஒழுக்கம் பற்றி இளங்கோவடிகள்,
“குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபிற் கோவலன் போல
இளிவாய் வண்டினொ டின்னிள வேனிலொடு
மலய மாருதந் திரிதரும்”