பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



சிலம்பு இலக்கிய யாப்பில் புதுமையாயிற்று. சிலம்பு, பரத்தைமையை ஒழித்த புதுமைப் படைப்பு! சிலம்பு, குடிமக்களை-குடிமகள் காற்சிலம்பைப் பாடு பொருளாக்கியது புதுமை!

சிலம்பு, குடிமக்கள் அரசை எதிர்த்து வழக்காடும் உரிமையைத் தந்த புதுமை உடையது. அரச நீதியை உயிராகக் கொண்ட அரசர்களை அறிமுகப்படுத்திய புதுமையைச் செய்தது.

சிலம்பு தமிழ்த் தேசியத்தைக் கண்டது. இது பொதுவில் விளைந்த புதுமை.