பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுச்சேரி கம்பன் விழாத் தலைமை உரை

357



கம்பனுடைய நாட்டுப்படலப் பாடல்களை நகரப்படலப் பாடல்களை நான் எப்பொழுதும் ‘உடோப்பியா’ என்று எண்ணியதில்லை. அவை உயிர்ப்புள்ள பாடல்கள். கம்பன் ஒரு புதிய சமுதாயத்தைப் பற்றி எண்ணியிருக்கிறான். ஆனால் வழக்கம்போல நாம் பதவுரை, பொழிப்புரையிலேயே நீண்டகாலம் சென்று விட்டதால் கம்பனுடைய ஆன்மாவை கண்டுபிடிக்காமலேயே விட்டு விட்டோம். இன்றுதான் கம்பனுடைய ஆன்ம தரிசனத்தை நானும் பார்க்கிறேன்! அனுபவிக்கிறேன்! உங்களுக்கும் காட்டியிருக்கிறேன்!

நன்றி! பாராட்டு! வாழ்த்துக்கள்!