பாட்டின் இலக்கணம்
இரண்டு கவிஞர்களும், தாங்கள் எடுத்துக் கொண்ட கதையைச் சொல்ல கலிவெண்பாவைக் கையாளுகிறார்கள்.
வெண்பா நான்கடிகள் மட்டுமே கொண்டது.
அதே வெண்பா பதினோரடி வரையில் பஃறொடை வெண்பா எனப்படும். அதைத் தாண்டும்போது கலிவெண்பா எனப்படும். அடிவரையறையற்ற வெண்பாவே கலி வெண்பாவாகும்.
நால்வகைப் பாக்களிலே வெண்பா எழுதுவது கடினமானது என்று இலக்கணப் புலவர்கள் சொல்லுவார்கள். ஆனால், பாரதியும் பாரதிதாசனும் எழுதியுள்ள வெண்பாக்களைப் பார்த்தால் கடினமாக எழுதியதுபோல் தோன்றவில்லை. மிக எளிமையாக இயற்றியது போலவே தோன்றுகிறது.
இலக்கணப் புலவர்கள் வெண்பா எழுதுவதை ஏன் கடினமானது என்று சொன்னார்கள்?
மற்ற பாக்களில் சீர் அமைப்பு ஒழுங்காக அமைந்திருந்தால் போதும். வெண்பாவில் ஒவ்வொரு சீரும் பின்வரும் சீருடன் சரியான வெண்டளையில் கட்டுண்டிருக்க வேண்டும்.
ஒருசீர் மாச்சீராக முடிந்தால் வருசீர் நிரையசையில் தொடங்க
வேண்டும்.