பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34 குயிலும்...சாரலும்

மூலிகையைப் பறித்துக் கொடுத்தால்தான் நான் உயிரோடு இருப்பேன் என்று வஞ்சி முரண்டு பிடிக்கிறாள்.

பேச்சுக்கள், கோபங்கள், சமாதானங்கள் என்னென்னவோ நடைபெறுகின்றன.

இறுதியில் மூ லி ைக ைய ப் பறித்துத்தர உடனே அழைத்துச் செல்வதாக உறுதி கொடுக்கின்றான்.

அழைத்துச் சென்று மூலிகையைப் பறித்துக் கொடுத்தால் நூறு முத்தங்கள் தருவதாக அவள் வாக்களிக்கின்றாள்.

அச்சாரமாக ஒரு முத்தம் கேட்கின்றான்.

சாதனைக்காரி அவள்.

மூலிகைப் பக்கத்தில்தான் முத்தம் கிடைக்கும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விடுகிறாள்.

வேறு வழியில்லை குப்பனுக்கு.

அழைத்துச் செல்கிறான். இல்லை. நடந்து சென்றால் நேரம் ஆகுமென்று துக்கிச் செல்கின்றான். மூலிகைச் செடியருகில் இறக்கி விடுகின்றான்.

மூலிகை தரும் அதிசயத்தில் ஈடுபட்டுத் தன் காதல் வேட்கையை மறந்து விடுகின்றான் குப்பன்.

மூலிகைக் காட்சியால் குப்பன் பகுத்தறிவு பெறுகிறான். தெளிந்தவனாகி விடுகின்றான்.

மீண்டும் காதல் உணர்வு தலையெடுக்கிறது.

கதிரவன் மேற்றிசையில் இறங்கும் காட்சி பார்! மாலை யழகுபார்! அன்னம் பேடுதேடும் அழகுபார்! என்னைப்பார்! என் நெஞ்சை உன் நெஞ்சு ஆக்கிப்பார் என்று வேட்கையோடு அழைக்கின்றான்.