பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வி :

கேள்வி :

உங்கள் தகுதிக்குச் சுவரும் சுண்ணாம்பும் தேவைதானா?

அதை ஒரு காரணத்துக்காக எழுதினேன். கவிதை ஒரு வீர வழிபாடு ஆகிவிட்டது. காதல், வீரம், பக்தி என்ற இம்மூன்று பொருளைப் பற்றி எழுதுவதுதான் க வி ைத மரபாகத் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. அம்மரபை மட்டந்தட்ட எழுதப்பட்டதுதான் சுவரும் சுண்ணாம்பும். -

கவிதையைப் பற்றி நீங்கள் கடைசியாகக் கூற விரும்புவது என்ன?

ஒரு கவிஞன் எழுதுவதெல்லாமே கவிதையாகி விடுவதில்லை. சிலவே கவிதை அந்தஸ்து பெறு கின்றன; தன் ப ைட ப் பு க் கு க் கவிதை அந்தஸ்தைத் தேடித் தரக் கவிஞன் கடினமாக உழைக்க வேண்டும். மூக்கில் நுழைவதுதான் மூச்சு; முதுகைத் தடவிச் சென்றால் அது காற்றுத்தான்.

சுரதா அரும்பிய நேரம்

தமிழ்க் கவிதையின் உள்ளடக்கத்திலும், உருவத்திலும், உத்தியிலும் பெரிய மாறுதல்களைக் கொண்டு வந்தவன்

பாரதி.

பாரதி இருபதாம் நூற்றாண்டுக் கவிதையின்

முதற்பாகம். பாரதிதாசன் இரண்டாம் பாகம்; சுரதா மூன்றாம் பாகம்.

38