பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரிந்து கொள்ள முடியாத வானுலகின் வாயிற் கதவே ! - என்று சாவைத் தன் சங்கீத வரிகளால் அலங்கரிக்கிறார்.

செயற்கைச் சொர்க்கத்துப் பரவச நிலையைக்கூட மரணத் துன்பத்தைக் கலந்துதான் அனுபவித்தார். 8 சிதிரியாப் பயணம்' என்ற கவிதையில், காதல் தீவே அவருக்குக் கறைபடிந்து காட்சியளிக்கிறது.

வானம் - தெளிந்த அழகோடு காட்சி யளிக்கிறது. கடலும் ஆழ்ந்த அமைதியுடன் படுத்திருக்கிறது. ஆனால் - எங்கும் இருள் : திட்டுத் திட்டான ரத்தக் கறைகள் ! என் இதயம் - ஒரு முரட்டுக் காகிதத்தில் சுருட்டப் பட்டுப் புதைந்து கிடப்பதாக எனக்குள் ஒர் உருவகம் !

ஒ வினஸே !

உன் காதல் தீவில்

ஒரு கற்பனைத்

தூக்கு மரத்தில்

என் உருவம்

தொங்கிக் கொண்டிருக்கிறது. 8 சிதியோ-கிரேக்கக் காதல் தேவதை வீனஸ் வீற்றிருக்கும் தீவு.

94