பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76.

“ஸ்ேது, இன்னிக்கு உனக்கு பிடிச்ச சமையல், ராத்திரி தங்கிச் சாப்பிட்டு விட்டுப் போயேன்!'

ஸ்ேதுவின் மூக்குதுனி விடய்த்தது.

சேப்பங்கிழங்கு ரோஸ்ட்'

ஸ்ேதுவின் முகம் தத்தளித்தது. நேரமில்லை. கிளம்பனும்.ரூட் 37-ஐ விட்டேன்னா அடுத்தது ஒரு மணி பொறுத்து, அதுவும் கிச்சயமில்லை."

‘என்ன வராப்போல வங்தே. நீ வந்தது உண்மை யில்லை, போவது தான் உறுதியா கடந்துக்கறே!'

  • அதுதான் வாழ்க்கை' புன்னகை புரிந்தபடி கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டான்-புன்னகையா வது விசனத்தின் மறுபக்கம் திருப்பிப் போடாமலே முறுக்கிறது.

திமி திமியென்று மாடிப்படியில் மிதியடிகளின் ஒசை.

'டாங் டாங்' டாங் 11 மணி அலறிற்று. மதுரம் கதவை முழுக்கத் திறப்பதற்குள் அலைமோதிற்று. சந்தைக்கடை இரைச்சல். இரைச்சலில்தான் இதே தலை முறை ஒளிந்து கொள்கிறது. கூடவே ஒவ்வாத அங்க சேஷ்டைகள்,

உர்ஸ்: உர்ஸ்தானா? உர்ஸ் தகதகத்தாள். வெள்ளைச் சந்தனக்கலர் புடவை மின்சார ஒளியில், யதேச்சையான உடல் அசைவுகளில் அதுவும் களின நீலம் காட்டுகிறது. இன்னொரு அசப்பில் வெள்ளையுடன் கலந்த லேசு ரோஜா. அங்கும் இங்குமாய் மின்மினித் தெளிப்புகள் பொரிகின்றன. ஏதோ கெலிடா ஸ்கோப் ஜாலக்.

பேஷ்! உன்னுடைய தேர்வா லலித்.”