பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

கூரைப் புடவையையும் தாலியையும் தாங்கி ஆசிக்கும் சபையோ?

11

கூடத்தில் ரகளை தாங்க முடியவில்லை. ரேடியோ கிராமை முழுசத்தத்துக்குத் திருப்பியாச்சு. ஸாச்மோ' அவன் எட்டிப் பிடிக்கும் ஸ்தாயிகள் உண்மையாகவே பயமாயிருக்கின்றன. கூடவே ப்ரபு கிதாரில் சமாளித்துப் பார்க்கிறான். ஒவ்வாத போட்டியென்று அவனே அறிவான். லூலுவும், சாமாவும் தனித்தனியாக ஆடுகிறார்கள். எனக் காகப் பார்க்கிறார்கள். (கொஞ்சம் இடது கண், வலது கண்) இல்லாவிடில் கட்டிப்பிடித்துக் கொண்டு ஆடுவார்கள் என்றே தோன்றுகிறது. அடே, பாளின் பெண்ணை காக்கைப் பிடிக்க வேண்டுமென்றால், உன் கதி இப்படியும் ஆகனுமா?

மதுரம் அடுப்பங்கரையில் ஒழித்துப் போட்டு அலம்பி விடும் காரியத்தில் இருக்கிறாள்.

'திக்குத் தெரியாமல்-இல்லை, திக்கில் அக்கறை யிலாது சலனம் மட்டும்தான் எங்கள் தத்துவம், தரம், எல் லாமே என்று அவன் தலைமுறையின் சின்னமாய் அவனை இப்படிப் பார்க்கையில் எனக்குத் தோன்றுகிறது.

உர்ஸ்-இந்தப் புயலின் மத்தி அமைதியில் அமர்ந்து விழி கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

கொஞ்ச நேரத்துக்குப் பின் எனக்குத் தாங்க முடிய வில்லை. மண்டையுள் ஏதேதோ முள்சக்கரங்கள் சுற்ற ஆரம்பித்து விட்டன. விரைந்து எழுந்து வீட்டின் மூன்று அறைகளில் ஒன்றில் தஞ்சம் புகுந்து விட்டேன். முன்னா