பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

நான் ஏன் இங்கு வந்தேன்? நான் இங்கு வேண்டப் படாதவன். என் வயதில் அந்த நிலைமை கஷ்டமாயிருக் கிறது. வயதானவர்கள், அவர்கள் வீட்டிலேயே, அழையா வீட்டுக்கு நுழையாச் சம்பந்தி. இங்கு வந்து இன்னும் கடியாரத்தின் இரண்டாவது வட்டம் முழுதாக முடிய வில்லை. நான் என் குடிசைக்கு ஏங்க ஆரம்பிச்சாச்சு.

12

நுண்ணறிவின் உள் உணர்வின் தட்டி எழுப்பலில் விழித்துக் கொண்டேன். அறையில் கான் தனியாகயில்லை. 'யாரது? நாக்கு எழவில்லை. கேள்வி கெஞ்சிலேயே சுருண்டு கொண்டது. சுவர்கள் ஒட்டிய மூலையிருளினின்று உருவம் பிரிந்து வந்து கட்டிலில் என்னருகே, ஒருக் களித்திருந்த என் உரு வளைவு கொடுத்த இடத்தில் அளவு பிடித்தாற்போல் உட்கார்ந்து கொண்டது. ஆனால், என் உள் கினைப்பின் அடித் தடத்தில் கமழும் எண்ண மண்டலத்தில் உன்னை எதிர்பார்த்துக் கொண்டு தானிருந் தேன்.

அசதி வடிய உருவி விட்டாற் போன்ற அயர்ந்த கித்திரையினின்று துல்லியமான விழிப்பு. விரல் நுனிகள் என்முகத்தைத் தொட்டன. வானில் சிலாக்கொம்பு முளைத் திருக்கிறது. லேம் பூத்த பனி மூட்டத்துள் மோனம் ஸ்புடம் வைத்திருக்கிறது.

என்னையறியாமல் என்னின்று

-'என்ன பெருமூச்சு? யாரென்று கினைத்திர்கள்: கள்ளப் புருஷனிடம் வந்திருக்கேனா? கணவனேதான தள்ளப்புருஷன் எனக்கு'