பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

பசும்பிடி
கார்சீனியா ஸ்பைகேட்டா (Garcinia spicata,,HK f.)

குறிஞ்சிப் பாட்டில் காணப்படும் ‘பசும் பிடி’ என்பதற்குப் ‘பச்சிலைப்பூ’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர். இது ஒரு மரம் எனவும். ‘பெருவாய் மலர்’ உடையது எனவும், இதன் கொழுந்து மணமுள்ளது எனவும்தான் அறிய முடிகிறது. இதனைக் கொண்டு இதனுடைய உண்மையான தாவரப் பெயரைக் கணிக்க இயலவில்லை. ஆயினும், இதனைப் ‘பச்சிலை’ எனக் கொண்டு கலைக் களஞ்சியம் இதற்குக் கார்சீனியா ஸாந்தோகைமஸ் என்னும் தாவரப் பெயரைக் குறிப்பிட்டுள்ளது. அதனால் இதன் இப்போதைய பெயரான கார்சீனியா ஸ்பைகேட்டா என்ற பெயரைச்சூட்டி இதற்கு விளக்கவுரை வரைதும்.

சங்க இலக்கியப் பெயர் : பசும்பிடி
பிற்கால இலக்கியப் பெயர் : பச்சிலைப்பூ
தாவரப் பெயர் : கார்சீனியா ஸ்பைகேட்டா
(Garcinia spicata)

பசும்பிடி இலக்கியம்


“பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா” என்றார் கபிலர் (குறிஞ். 70). இதில் உள்ள ‘பசும் பிடி’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘பச்சிலைப்பூ’ என்று உரை கூறினார்.

‘பசும்பிடி இளமுகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல்’ என்பது பரிபாடல் (19: 75). இதற்குப் பரிமேலழகர் ‘பச்சிலையது இளைய கொழுந்து’ என்று உரை கண்டார்.

“கரும்பார் சோலைப் பெரும்பெயர் கொல்லிப்
 பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து

என்னும் பதிற்றுப்பத்து (81 : 24-25)