தா
'தா' என்ருல் தருவீரா, இந்தா' என்று?
சமநிலையில் உள்ளவர்பால் கேட்கும் சொல்; தா! தாவென்ருல் குரங்குபோல மரத்தில் தாண்டல்;
தாவலிலே ஆவலுள்ள மனிதன் உண்டு தாயென்ருல் மாதாதான்; பிதாவோ தந்தை; தாத்தாவும் ஆத்தாவும் மூத்தார் ஆவர்! 'தா' என்ருல் தாம்பூல வாய், தா; அத்தான்
தாலிகட்டித் தாரம் ஆணுய்; தாகம் கொள்வாய் !
தாதுபார்த்து காடிகளின் துடிப்பை நோக்கித்
"தாறுமாருய்த் தாமதமாய் என்பால் வந்தாய்! தாதிபார்த்துத் தருகின்ற மருந்த ருந்தித்
தாயாதிக் காய்ச்சலெலாம் தாங்கிக் கொள்வாய். தாதாளன் றுனையெண்ணித் தாரை வார்த்தாய்;
தாராளம் எதுவரையில் தாங்கும்? யார்க்கும் தாதனென வாழாதே, கிமிர்வாய்' என்று
தாமுரைத்தார் மருத்துவராம் எனது நண்பர்!
தாக்கணங்கு வாராத சங்க் நூலின்
தாளில்லை; இந்நாளில் எவர்தாம் பார்த்தார்? தாக்குவதோ தாவணியில் லாத ஆடை,
தாட்சணியம் பெண்கள்பால் இல்லை என்ற தாக்கலொன்றும் இதுவரையில் கேட்ட தில்லை; தாங்குவரோ இல்லத்தார் தாண்ட வத்தை! தாக்குதல்கள் போர்முனையில் தானேக் குள்ளே!
தாழியின்மேல் குந்தாணி தாயத் தாகும்.
53