54
உதாரகுணம் வள்ளலாக்கும் சித்தாந் தந்தான்;
ஊதாரிப் பட்டத்தைப் பதாகை யாக்கும்! உதாரணமாய் ஊர்க்கென்று வாழ்ந்தால், தாசன்
ஒய்ந்தான கூத்தாடி?” என்றே கூறிஉதாசீனம் காதாரக் கேட்கப் பேசி
உடைத்திடுவார்; பிரதாபம் மத்தாப் பூவாம்! எதார்த்தவாதி வேதாந்தி, தாடி மீசை
ஏன்?’ என்று தாடையிலே தாளம் வைப்பார்!
ஆதாயம் இல்லாமல் ஆற்றைக் கட்டி,
ஆரிறைத்தார்? தாமரையின் தண்டு, நீரில்; ஆதாரம் கேட்பாரா? தாழை, முள்ளாம்;
அந்திமந்தா ரையில்ஏது? மேதா விக்குச் சூதாட்டம் எதற்காக தாம்பில் தொங்கத்
தோதாகும்; சோதாவோ வாதாடல்தான்! சாதார ணக்குடிக்குச் சேதா ரங்கள்
சதாவந்தால் தாழ்வாகும் நிலைமை மேலும்!
தானத்தில் அன்னதானம் சொர்ண தானம்
தான்யதானம் கோதானம் பூமி தானம் தானத்தில் சந்தானம் அளவாய் வேண்டும்;
தாவரம்போல் தழைக்கவிடக் கூடா தென்பார்: தானத்தில் சமாதானம் உலகத் தேவை; -
சமத்தான உறவுக்கும் பிரதா னந்தான்! தானத்தில் நிதானந்தான் விதானம் போலே;
தாரகமும் அதேயாம்: போதும் இத்'தா'!