பக்கம்:செவ்வானம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 செவ்வானம் சந்தேகமே கிடையாது. நீங்க எந்தக் காரியத்தையுமே சரியாகச் செய்யமாட்டீங்க போங்கடா என்று கத்தி, அவர்களை அனுப்பி வைத்தார். பூரீமான் சிவசைலத்திற்குத் தீவிரமாக யோசிப்பதற்குரிய விஷயம் கிடைத்துவிட்டது. அப்புறமென்ன! என்ன செய்யலாம், அறிந்துள்ள ஆதாரங்களை வைத்துக் கொண்டு என்னென்ன மிரட்டு வேலைகள் செய்ய முடியும் என்று தீவிரமாகத் திட்டமிடுவதில் ஆழ்ந்தார் அவர். 'இன்னும் கொஞ்சநாளைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி அவனை மிரளும்படி செய்வதுதான் சரி. அவளுக்குக்கூடதிடீரென்று ஒரு நீளக் கடிதம் எழுதவேணும் என்று எண்ணினார். கடிதங்கள் எழுதி அனுப்புவதில் பயனை எதிர்பாராமல் எழுதிப்போடுவதில் சிலருக்கு அலாதியான ஆசை உண்டு. மொட்டைக்கடுதாசி எழுதுகிறவர்கள் முதல், பத்திரிகை ஆசிரி யருக்குக் கடிதம் எழுதியனுப்புகிறவர்கள் வரை எல்லோரையும் தோற்கடிக்கும் வகையில் வீர தீர உஷார்க் கடிதங்களும், வெத்துவேட்டு லெட்டர்களும் சிருஷ்டித்து அனுப்பும் திறமை சிவசைலத்திடம் காணப்பட்டது. அதை அவர் பாழடையும்படி விட்டுவிடுவதில்லை. ஆகவே யாருக்கு எப்படி எழுதுவது என்ற துடிப்பு அவர் உள்ளத்தில் நிறைந்து நின்றது. சிவசைலம் தனது முழுத்திறமையும் பிரயோகித்து அற்புதமான கடிதங்கள் எழுதியிருப்பார். அதற்கு வேண்டிய மன எழுச்சி தலை துக்கிக் கொண்டிருந்தது. ஆனால், அதை மட்டம் தட்டி ஒடுக்கிவிடக் கங்கணம் கட்டி வந்ததுபோல் குறுக்கிட்டது ஒரு அழைப்பு. முதலாளி புன்னைவனத்திடமிருந்து வந்த அவசர அழைப்புதான். கடியாரத்தைப் பார்த்தார் அவர், இரவு மணி ஏழரை வர முடியாது' என்று சொல்லிவிடலாம் என ஒரு மனம் விரும்பியது. ஆனால் உலக அனுபவத்தில் நீந்தித்திளைத்த மனதின் மறுபகுதி அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/74&oldid=841441" இலிருந்து மீள்விக்கப்பட்டது