பக்கம்:செவ்வானம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 79 'அதுபெரிய வேஷமாக்கும் சரி. போகட்டும் என்று ஒதுங்கி விட்டு அவர் முதலாளியிடம் நீங்கள் விஷயத்தை எல்லாம் விளக்கி விட்டீர்களா?' என்று கேட்டார். 'நீங்க தான் சொல்லணும் என்று பல்லைக்காட்டினார் புன்னைவனம். ஆகவே ஆலோசகர் கனைத்துக் தொண்டையைச் சரிப்படுத்திக் கொண்டு விளக்க உரையை ஆரம்பித்தார். 'விஷயமென்ன வென்றால், நாங்கள் பிரமாதமான திட்டம் போட்டிருக்கிறோம். நம்ம முதலாளி கந்தர்வ கலா மண்டபம் பிரமாதமாகக் கட்டியிருப்பதும், ரொம்பச் சிறப்பாக அதற்குத் திறப்பு விழா நடத்தியதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது கலைக்கோயிலாக விளங்கவேண்டும் என்பது எங்கள் ஆசை பணம் பண்ணுவதற்காக அதை வெறும் சினிமாத் தியேட்டராக்கிவிடப் போவதில்லை. புதுப்புது நாடகங்கள், நாட்டியங்கள் எல்லாம் அரங்கேற வேண்டும். முதலாளியே ஒரு நாடகசபை தொடங்க எண்ணி விட்டார்கள். பிரமாதமான நாடகங்கள் பல தயாரித்து அரங்கேற்றுவோம். அவற்றையே அப்புறம் படம் பிடிக்க எண்ணம் தமிழ் நாட்டின் நாடகக்கலை, நடிப்புச் செல்வம் பற்றியெல்லாம் உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் உணர்வதற்காக வட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், திபெத், ஈரான், பாரசீகம், சீனா, ஜப்பான், சோவியத் ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க, ஐக்கியநாடுகள், ஆஸ்திரேலியா இப்படி எங்கெங்கெல்லாம் மனிதர்கள் வசிக்கிறார்களோ - எங்கேயெல்லாம் நாகரிகம் பரவியிருக்கிறதோஅங்கெல்லாம் நமது படங்களை அனுப்புவதுடன், நமது கந்தர்வ கலைக் கழகமும் நேரடியாகப் படையெடுத்து கலைக்கொடி நாட்டித் திரும்பும். புரிகிறதா? இதற்குப் பிரபல நடிகரத்தினங்கள் எல்லோரும் ஆதரவும் ஒத்துழைப்பும் தருவதாக வாக்களித்துள்ளனர். நம் நாட்டு நாடக சர்வாதிகாரி ராமண்ணா அவர்கள் உலகப்படையெடுப்பின் போது தாமே நடிக்க வருவதாகச் சொல்லியிருக்கிறார். முக்கிய நடிகைகள் தான் தேவை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/81&oldid=841449" இலிருந்து மீள்விக்கப்பட்டது