பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

616

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


என்பது இதன் பொருளாகும்.

சிவமாகிய முழுமுதற்பொருள், உயிர்களின் கட்டு லயிலும் வீட்டு நிலையிலும் அவ்வுயிர்களை விட்டு து அவையேதானேயாய் என்றும் ஒட்டிநிற்கும் து என்பார், நீங்காச் சிவானந்தளுேயம்’ என்றார். மே என்னுடைய அன்பே எனப் போற்றுவர் வாசகர். ஞேயம் என்றது, சிவஞானத்தின் துணை "... tடு உயிர்களால் உணர்ந்து பயன்கொள்ளுதற்குரிய கடவுளை. ளுேயத்தே நிற்றலாவது, அப்பரம்பொருள் நல்கிய நிறைந்த சிவஞானத்திலே தாம் அடங்கித் தமது அறிவினுள்ளே சிவானந்தமாகிய பேரின்பம் குடி கொள்ளும்படி அம்மெய்ப்பொருளுணர்வில் அழுந்தி இன் துயில் (ஆனந்தநித்திரை) கொள்ளுதல். இதன் இயல்பினை,

so

"ஓங்குணர்வின் உள்ளடங்கி உள்ளத்துள் இன்பொடுங்கத்

துங்குவர்மற் றேதுண்டு சொல்” (91)

என வரும் திருவருட் பயனில் உமாபதி சிவம் இனிது விளக்கியுள்ளார்.

வினை ஒழிவுபெற்ற நல்லுயிர்கள் பழைய வாசனைத் தொடர்பால் மலமாயை கன்மங்கள் மேல்வந்து அடராத வாறு உயிர்க்குயிராய் நிற்கின்ற திருவருள் ஞானத்தோடும் கூடி ளுேயமாகிய பொருளிற்பிரிவற அழுந்தி நிற்றலாகிய அனைந்தோர் தன்மையினையுணர்த்துவது மேற்குறித்த திருவருட் பயனாகும். இதன்கண் ஓங்குனர்வு’ என்றது, உயிர்களைத் தோற்றமில்காலமாக மறைத்து வந்துள்ள ஆணவ இருள் விட்டு நீங்கத்தக்கதாகப் பக்குவமுடைய உயிர்களின் உள்ளத்திலே பேரொளியாய் விரிந்து பரவி மேலிட்ட சிவஞானத்தினை. அவ்வுணர்வினுள் அடங்க லாவது, உயிரானது சிவஞானமாகிய அப் பேரறிவுக்குள்ளே அடங்கித் தற்போதும் தோன்றாமல் நிற்றல். 'உள்ளத்தில் இன்பு ஒடுங்க” என்றது, சீவன்முத்தராயுள்ள அவர்கள் தங்கள் உள்ளத்திலே சிவனைத் தியானிக்கும்போது சிவன் அங்கே பதிந்து நிற்றலால் அவர் தமது உள்ளத்திலே பேரின்பம்