பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

அன்னா அமதோவா உருசியக் கூட்டரசு

(1889–1966)


என்னுடைத் தாய கத்தைப் பாழ்செய்த போர்கள் நீங்கிச் சென்றன. ஆண்டோர் ஐந்தே. சேர்ந்ததே அமைதி மெல்லப் பொன்னுடை உருசி யாவின் பொலிசம வெளியில் எல்லாம் மின்உறை பனியும் முன்போல் மேவிடும், அமைதி இன்பம்.

கலங்குறும் அலைகள் ஆர்க்கும் கடற்கரை இருளின் ஊடே கலங்கரை விளக்கம் மீண்டும் கதிர்ஒளி பரப்பிச் சுற்றும்; நலமனை வாயில் நின்று நகைசெயும் அன்பர் கண்போல் இலம்நோக்கும் கடல்வா னர்க்கே! இன்னொளி அவைவ ழங்கும்.

8