சாலைப் பாடல்
சாலைப் பாடல் இதுவாகும்
சாலைப் பாடல் பாடுவன்நான்...... சாலை வழிப்போக்கு ஒன்றினையே சார்ந்தி ருந்தால் வழியிடையில் கோல நெருப்பில் குளிர்காயக்
கொழுந்தீ எரியும் பைன்மரத்தின் காலக் கனியின் கமழ்மணத்தை
நுகர்ந்தி ருக்கக் கூடுவனோ?
ஏரிப் பரப்பில், ஆறுகளில்,
எழுமுன் கதிரோன் மீன்துள்ளி நீரில் நிகழ்த்தும் ஆடலினை
ஒருபோ தும்நான் நுகர்ந்தறியேன்: நேரில் தெரியும் மலைகளிலே
நேராய்ப் பேசும் எதிரொலியின் பூரித்து உவக்கும் குரல்கள்தமில்
பூரித் திருக்கக் கூடுவனோ?
வேட்டைக் காரர் வழிகளிலே
மட்டு மேநான் விரைந்திருந்தால்
காட்டும் நகரின் கட்டடங்கள் கங்குல் அமைதி நீரினிலே
கூட்டும் எழிலாய் இலங்குவதில்
வயப்பட் டிருக்க வாய்ப்புண்டோ?
கொழித்துச் செழிக்கும் புதியநகர்க்
கோட்டங் களிலே குழந்தைகளின் ஒழிச்சல் அற்ற கூச்சல்களில்
உள்ளம் வயப்பட் டிருப்பேனோ?
தாலின் நகரச் சந்துகளில்
பூங்காக் களிலே தனித்துலவும் கோலக் கூந்தல் கோதையர்பால்
உள்ளம் போக்கி யிருப்பேனோ?
7