பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கபூர் குல்யாம் உஸ்பெகிஸ்தான் (1903-1966)

பாடலையும் காதலையும் என்றோநான் மூட்டைகட்டி விட்டேன் பற்றிவந்த வழியினையும், தெளிவுடனே பார்த்துக்களித் திட்டேன். பாடலையும் காதலையும் ஒருவழியாய் மூட்டைகட்டி விட்டேன். பற்றியளன் கவலைமுடிச் சிக்கலினை அவிழ்த்தெறிந்து விட்டேன். தெளிவான பாதைஎன்றன் எதிரினிலே சிக்கலின்றித் தெரியும். சிறுபுயல் ஏதும்இல்லை வீண்கனவு மனக்குழப்பம் இல்லை. - ஒளிக்கோடாய் நேர்எதிரில் சந்துபொந்து கிறுக்குத்தனம் இன்றி ஒடியஅப் பாதையிலே மெல்லெனநான் வெற்றிநடை இட்டேன். இருந்தாலும் முன்இருந்த சத்திரத்தைக் கண்டதுமே நெஞ்சில் என்றென்றும் உள்ளுறங்கும் பழங்கிளர்ச்சி

6.3