பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடில்தோறும் ஓங்கும்களிப் பாடல் எழவே கூடும்இரா. இன்பத்தில் தள்ளாடிக் கழியுமே. துடிப்பிதழ்கள் குவளையினைத் தொட்டு உறிஞ்சுமே! துள்ளிஎழும் புதுநறவின் வெள்ளம் பொங்குமே!

இராநிழலில் மதுக்கலங்கள் கலக லக்குமே எல்லாரின் மண்டைகளும் விறுவி றுக்குமே! நறாமயக்கில் உளறிக்கொண்டே வீடுசெல் கையில் நடுத்தெருவில் அடர்நிழல்கள் எதிரொ ளிக்குமே!

வழியில்எதிர் வீசும்தென்றல் காற்றுங் கூடஉன் சட்டையினைப் பிடித்திழுத்துத் திசையை மாற்றுமே. களிமயக்கில் அதுகூட நிலைஇ ழந்ததே! கையசைப்பாய்; சிரிப்படக்க முடிய வில்லையே!

71