பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணக் கோலம் - கிரகப்பிரவேசம் 215

என்னைப் போன்ற யெளவனப் பெண்களின் நிலைமையும் இருக்கிறது. கற்பாகிய பாலில், துர்நடத்தையாகிய புளிப்பு அணுவளவும் அண்டவிடாமல் காப்பாற்றுகிற வரையில்தான் எங்களுக்குப் பூஜிதையென்பதை, நான் எல்லாம் கெட்ட பிறகு உணர்ந்துகொண்டு தவிக்கலாயிற்றே! அமிர்தம் போன்ற குணமுடைய என் அரிய அப்பா அருங்குணத் தாயே! இந்தக் கடிதத்திற்காவது நீங்கள் இரங்கி என்னை இந்த நரகத்திலிருந்து மீட்காவிட்டால், இதுவே நான் உங்களுக்கு எழுதும் கடைசிக் கடிதம். இனி நான் தற்கொலை செய்து கொள்வதே முடிவான விடுதலை, இந்த மனிதருடைய மோசங்களும் புரட்டுகளும் அதிகரித்து விட்டன. துஷ்டர்களான வேலைக்காரர்களை ஏவி, இவர் செய்யாத மோசம் பாக்கி இல்லை. புஷ்பாவதிக்கும் இவரிடம் இருக்கப் பிடிக்கவில்லை. எனக்கும் அப்படியே. எங்கள் இருவருக்கும் வேறு போக்கிடம் இல்லை. ஆகையால், இவரிடம் பிரியமாயிருப்பவர்கள் போலவும், இவருடைய மனசு போலவும் நடிக்கிறோம். இவருக்குப் பணச் செலவு அதிகமாக ஆக, இவருடைய மோசங்களும் திருட்டுகளும் அதிகரித்து விட்டன. இப்போது சமீபத்தில் இவரும் இவருடைய ஆள்களும் சேர்ந்து ஒரு பெரிய திருட்டை நடத்தியிருக்கிறார்கள். மைலாப்பூரில் நடுத்தெருவிலுள்ள ஒருவர் சைனா பஜாரிலுள்ள இன்னொருவருக்கு 10 ரூபாய் மணியார்டர் அனுப்பியதுபோலப் பணத்தை இவரே அனுப்பிவிட்டு, சைனா பஜாரிலுள்ள அந்த வீட்டையும் இவரே வாடகைக்கு எடுத்து அதற்கு ஆள்களை வைத்து, தபாற்காரன் இரண்டாங்கட்டிற்கு வந்த உடனே அவனைப் பிடித்துக் கட்டிப் போட்டுவிட்டு, அவனிடமிருந்த ஏராளமான மணியார்டர் பணத்தையும், ரிஜிஸ்டர்டு இன்ஷியூர்டு கடிதங்களையும் அபகரித்துக் கொண்டு வந்துவிட்டார். அது மாத்திரமல்ல. புரசைப்பாக்கத்தில் துபாஷ் ராஜரத்ன முதலியார் என்று ஒரு தனிகர் இருந்தாராம். அவர் போன வருஷம் இறந்து போய் விட்டாராம். அவருக்கு லக்ஷக் கணக்கில் சொத்துகளும் இரண்டு மூன்று பங்களாக்களும் இருக்கின்றனவாம். அவருக்கு ஆண் குழந்தை இல்லையாம்; வயசு வந்த இரண்டு பெண்கள் இருக்கிறார்களாம். இரண்டு பேரும் நல்ல ரூபவதிகள். அவர்களுடைய தாயாரும் இருக்கிறார்கள். ஆனாலும் மூத்த