பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41



இன்று இங்கு நிலைத்து வாழ்வோர் எல்லோருந் தமிழர். இவருள் உயர்வு தாழ்வுகளும் படைத்துக்கொள்ளப்பட்டனவே. அவையும் பட்டுமாய்ந்த கொண்டிருக்கின்றன. படிப்பதற்குரியோர் இன்னவர் என்னும் வரையறை யிருந்த இடந்தெரியாது அழிந்துபோயிற்று.

எனவே'எல்லோரும் தமிழர்' எனவெழுச்சியோ டெண்ணித் தமிழ் மொழி பேணி வளர்த்துத் தமிழராயோர்க்கு வேண்டுவதாய் பரந்துபட்ட அறிவு முழுவதையுந் தமிழிலே கற்றுப் பெருமை பெறலே இன்றுள்ள நிலைக் கேற்றதாம். பழம் பாடங்களை வரலாற்றாலுணராது இன்றும் தமிழரையாளும் நிலையுடைய தமிழர்தம் மொழியைத் 'தானே வளரும்' என்று விட்டு ஊரார் மொழிகளை 'யூட்டி வளர்ப்பர்' எனின் அது தகுவதாமா? நம் நாட்டுக் கல்வியின் முன்னைப் பழம் பெருமையையும் பின்னுண்டாய இழிவையுங் கண்டு எண்ணிப் பார்த்துத் தக்கதே செய்வராக.

இக்கட்டுரை காட்டிய தமிழரசு பற்றிய குறிப்புக் காட்சிப்பழம் பொருளே. தமிழர் சமூகச் சாதி பற்றிய குறிப்பும் கல்வி பற்றிய குறிப்பும் எதிர்காலத்துக்கேற்ற நற்பாடங்களை யேற்கவுதவுவனவாக.