பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

169



10. ஒலி பற்றிய பெயர்த் தொகுதி

இப்பகுதியில் ஒலி (ஓசை) தொடர்பான பல்வேறு பிரிவுகளின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. இதனை இன்னும் நன்கு விளக்க வேண்டும்.

ஒரு மொழி (பாஷை) எனப்படுவது, பல சொற்றொடர்களால் (வாக்கியங்களால்) பேசப்படுவது. ஒரு சொற்றொடர் பல சொற்களால் ஆனது. ஒரு சொல் பல எழுத்துக்களால் ஆனது. ஓர் எழுத்தோ பல ஒலி அணுக்களால் ஆனது. அதாவது, அணு அணுவான பல ஒலிகளின் திரளே ஓர் எழுத்தாகும் எடுத்துக்காட்டாக, ‘ஆ’ என்னும் ஓர் எழுத்தை ஒலிக்கச் சிறிது சிறிதாக—அணு அணுவாக ஓசையை நீட்டிக்கொண்டே செல்லவேண்டும். எனவே, பல ஒலியணுக்களால் ஆனது. எழுத்து; பல எழுத்துக்களாலானது சொல்; பல, சொற்களாலானது சொற்றொடர்; பல சொற்றொடர்களைக் கொண்டது ஒரு மொழி—என்பது புலனாகும். இதனைப் பவணந்தி முனிவர் தமது நன்னூலில்,

“மொழிமுதற் காரணமாம்,
      அணுத்திரள் ஒலி எழுத்து.”

எனச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துள்ளார். இது ‘காரண காரிய முறை’ (Logical Method) எனப்படும்.

எனவே, ஒலி பற்றிய பெயர்த் தொகுதியில், ஒலி பற்றிய விவரங்களும், ஒலியாலான எழுத