பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19-பாதி-தன்னுடைய-கவிதைகளுக்கு எழுதியுள்ள சில урятsusovssiт ΤΊ2 அனுபவக் குறையினாலும் ஆற்றல் குறைவினாலும் நேரும் பிழைகளைப் பொருத்தருள் செய்க” என்று குறிப்பிடுகிறார். பாரதி கூறும் இந்தக் கருத்துக்கள் இலக்கியத்தில் ஒரு புதிய கருத்தாகும். இக்கருத்தின் உரைநடையாக இம்முகவுரை அமைந்திருக்கிறது. "பாஞ்சாலி சபதம்” என்னும் காவியத்திற்கு பாரதி எழுதியுள்ள முகவுரை வருமாறு : “எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஒரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும் படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்துதல் வேண்டும். “காரியம் மிகப் பெரியது. எனது திறமை சிறிது. ஆசையால் இதை எழுதி வெளியிடுகிறேன். பிறருக்கு ஆதர்சமாக அல்ல, வழிகாட்டியாக. இந்நூலிடையே திருதராஷ்டிரனை உயர்ந்த குணங் -களுடையவனாகவும் சூதில் விருப்பமில்லாத வனாகவும் துரியோதனனிடம் வெறுப்புள்ளவனாகவும் காட்டியிருக்கிறேன். அவனும் மகனைப் போலவே துர்க்குணங்களுடையவன் என்று கருதுவோருமுளர். எனது சித்திரம் வியாச பாரதக் கருத்தைத் தழுவியது. பெரும்பான்மையாக இந்நூலை வியாச பாரதத்தின் மொழி பெயர்ப்பென்றே கருதி விடலாம். அதாவது கற்பனை