பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பாரதியின் உரைநடைக்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு 70 இங்ங்ணம் அறுபது வருஷங்கள் ஆகி விட்டன. இதற்கிடையே உலகத்தில் நடந்த மாறுதல்கள் பல. கலியுகத்தின் குதிரையாக இருந்த நீராவியை இப்போது மின்சக்தி கண்டு நகைக்கிறது. கண்ணுக்கு எட்டாதிருந்தது பரமானு. இப்போது மனத்துக்கு எட்டாதிருந்த சித்தாந்தம் உண்டாயிருக்கிறது. சாகப் போகிற எறும்பைக் போல மனிதனும் சிறகு முளைத்துப் பறக்கிறான். வானத்தில் இடம் உனக்கா எனக்கா? என்று நீதி ஸ்தலத்தில் வியாஜ்யங்கள் விரைவாக வரக் கூடிய காலத்தை வக்கீல்கள் எதிர் பார்க்கிறார்கள். ஒரே நாள் இரவில் சீனர் எல்லோரும் தங்கள் பன்றிக்குடுமியை நறுக்கி எறிந்தனர். ஐநூறு வருஷத்தாவுதலை ஜப்பான் ஐம்பது வருஷத்தில் தாவி விட்டது. ஆனால் இந்த சித்பூர் ரஸ்தாவில் மழை பெய்தால் சேறு உண்டாகாமல் செய்ய வழியில்லை. அதன் ஸ்திதிக்கு மாறுதல் இல்லை. காங்கிரஸ் என்ற பெயர் உண்டாவதற்கு முன்பு நமது ஜாதிப் பாட்டு எத்தனை எத்தனை சோகமாயிருந்ததோ அத்தனை சோகமாகத்தான் இப்போது ஸ்வராஜ்யம் நெருங்கி வரும் தருணத்திலும் இருக்கிறது” என்பது பாரதியின் மொழியாக்கத் தமிழ் நடையாகும். பொதுவாக மொழி பெயர்ப்புப் பணி மிகவும் கடினமான பணிகளில் ஒன்று. மொழி பெயர்ப்பாளருக்கு முதலாவதாக இரு மொழிகளிலும் நல்ல பயிற்சியும் பாண்டித்யமும் இருக்க வேண்டும். அதற்கு ஈடாக மொழியாக்கம் செய்யப்பட வேண்டிய பொருளைப் பற்றிய ஞானம் குறைந்தபட்சம் இருக்க வேண்டும். இரண்டாவது மொழியாக்கம் செய்து எழுதப்படும் மொழியில் பொருள் குறையாமலும் சரளமான நடையிலும் உரைநடை அமைய வேண்டும். அக்கலையில் கை தேர்ந்து விளங்குகிறார் பாரதியார். கருத்தும் பொருளும் சுவையும் குன்றாமல் சிறந்த தமிழ் நடையில் பாரதியாரின் மொழி பெயர்ப்புகளைக் காண முடிகிறது.