பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

பொருள் காண்பதே உண்மையாகவிருக்கும். இதனால் வறுமைத் துன்பம் அவனை நேற்று மட்டும் வந்து வருத்தவில்லை. அதற்கு முன்பும் பல தடவை வந்து அவனை வருத்தியிருக்கிறது என்று கொள்ளவேண்டியிருக்கிறது.

"நாள்தோறும் வந்து என்னைத் துன்புறுத்தும் வறுமைத்துன்பம் நேற்றும் வந்தது: அது இன்றும் வரும் போலிருக்கிறது. வந்தால் நான் என்ன செய்வேன்?” என்று வறுமைத் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் ஒருவன் ஏங்கி அஞ்சி நடுங்கும் காட்சியை இக் குறள் படம் பிடித்துக் காட்டுகிறது. இதைக் காணும் பொழுது நமது உள்ளமும் நடுங்குகிறது.

“வருவது” என்ற ஒரு சொல் இக்குறளிலிருந்து நாள் தோறும் வருவது நேற்றும் வந்தது, இன்றும் வரும் போலிருக்கிறது என்ற பொருளைமட்டும் காட்டிக் கொண்டில்லை. “வந்த அது நாள்தோறும் போய்க் கொண்டிருக்கிறது” என்ற பொருளையும் காட்டிக் கொண்டிருக்கிறது.

“வந்து நிலைத்து நின்றுவிடும் வறுமையைவிட, அடிக்கடி வந்து போகும் வறுமை அதிகத் துன்பத்தை விளைவிக்கும்” என்பது, இக்குறளில் புதைத்து கிடக்கும் பொருளாகும்.

வறுமையாளர் இருவகை. எப்போதுமே இல்லாதவர்; இடையிலே இல்லாமற்போனவர் என்று. இடையிலே இல்லாமற்போனவர் அடையுந் துன்பமும் இருவகை. வருவார்க்கு வழங்கப் பொருளில்லாமை, வந்த பசிக்கு உணவில்லாமை என்று. இதனை ஈய முடியாமை, துய்க்க முடியாமை என்பர். இவ்விரண்டுகூட நிலைத்து நில்லாமல் அடிக்கடி வந்துபோய் விளைக்கும் கொடு