111
13. அவாவறுத்தல்
அவாவறுத்தலாவது பொருள் மேற் செல்லும் ஆசையைத் தவிர்தல், முத்திக்குக்காரணம் மெய்யுணர்தலே யமையுமாயினும், . ம்போடு நிற்றலின் தான் விடப்பட்ட பொருள்கள்மாட்டு ஆசை செல்லின், மீண்டும் பிறப்பிற்குக் காரணமாம்; ஆதலான். இதனைத் தவிர வேண்டுமென்று எல்லாவற்றினும் பின் கூறப்பட்டது.
361. அஞ்சுவ தோரு மறனே யொருவனை
வஞ்சிப்ப தோரு மவா.
(இ-ள்) ஒருவனை வஞ்சனை செய்வது ஆசை, ஆதலால், அதனை அஞ்சுவதே அறம் ஆவது (எ- று)
வஞ்சனை செய்தல்-நன்றி செய்வாரைப் போல முன்னே நின்று, பின்னே தீக்கதியுள் உய்த்தல். இஃது அவாவின்மை வேண்டுமென்றது. 1.
362. அவாவில்லார்க் கில்லாகுத் துன்பமஃ துண்டேற்
றவாஅது மேன்மேல் வரும்.
(இ-ள்) ஆசையில்லாதார்க்குத் து ன் ப ம் இல்லையாகும்; அஃது உண்டாயின், துன்பமானது கெடாது மேலே மேலே வரும்,
(எ-று)
அவாவுண்டானால்
வரும்குற்ற மென்னை யென்றார்க்குக் கூறப்பட்டது.
2
363. அவரவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ், ஞான்றுத்
தவா அப் பிறப்பினும் வித்து.
(இ-ள்) எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப் பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர். (எ-று)
இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பினையும் தருமென்றது. 3.
364, அற்றவ ரென்பா ரவாவற்றார் 19ற்றையச
ரற்றாக வற்ற திலர்.