201
4. வினைத்திட்பம்
(இ-ள்) தாம் எண்ணிய கருமங்களை எண்ணியபடியே பெறு வர்; அவ்வாறு எண்ணியவர் அவ்வினையைச் செய்து முடிக்குத் திண்மையுடையாராகப் பெறுவாராயின், (எ-று).
இது, வினையின் கண் திண்மை வேண்டுமென்றது. 1
662. எனைத் திட்ப மெய் தியக் கண்னுைம் வினைத் திட்பம்
வேண்டாரை வேண்டா து லகு.
(இ-ள்) கருவி முதலாயின வெல்லாவாற்றானும் திண்மை பெற்றவிடத்தும், வினையினது திண்மையை விரும்பாதாாை உலகத் தாள் விரும்பார், (எ-று).
பல பொருளும் மிகுதியுடையார்க்கு வினைத்திட்ப மின்றா னால் வருங் குற்ற மென்னை யென்றார்க்கு, இது கூறப்பட்டது. 2
663. வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்ப
மற்றைய வெல்லாம் பிற.
(இ-ள்) வினைத் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவன் மனத்தின் உண்டான திண்மை; அதனையொழிய மற்றையவெல் லாம் திண்மையென்று சொல்லப்படா. (எ-று).
மற்றைய வென்பது கருவியும் உபாயமுடித்தலும். வினைத்திட் பம் யாதென்றார்க்கு இது கூறப்பட்டது. 3.
664. * ஊறொரா ருற்றபி னொல்காமை யில்விரண்டி
னாறென்ப ராய்ந்தவர் கோள்.
- -*.
-
1. மற்றவை’ என்பது மணக். பாடம்.
- (பரிமேலழகர் கூறும் பாட பேதம் ஊறொரார்’ என் பது. இப்பாடம் மணக்குடவர் பரிப்பெருமாள் கொண் டனவே யாதல் உரையான் அறியப்பெறும் ஆகவே ‘ஊரொறாவ்” என்றபாடம் ஊறொரார்” எ ன் று இங்குத் திருத்தப் பெற்றது. பின்னும் ஊறு,ஓராது என்
றமை காண்க.)