312
8. குடி செயல் வகை
வளருகின்ற வினையாவது ஒரு வினையைச் செய்து முடித்தால் அவ்வளவிலே நின்று அமையாது பின்னும் ஒரு வினையைத் தொடங்குதல், மேல் குடி ஒம்ப வேண்டும் என்றார்; அஃது ஒம்பு மாறு என் னை என்றார்க்கு இது கூறப்பட்டது, 3
1024. கருமஞ் செயவொருவன் கைதுவே னென்னும்
பெருமையிற் பீடுடைய தில்.
(இ-ள்) ஒருவன் கை கருமஞ் செய்தலினாலே உண்டிலே னென்று சொல்லுகின்ற பெருமை போலப் பெருமையுடையது பிறிது இல்லை, (எ-று).
மேல் எப்பொழுதும் இடைவிடாமல் வினைசெய்ய வேண்டும் என்றார். அது பெரியோ ரால் செய்யலாகுமோ என்றார்க் கு
இதனின் மிகுந்ததோர் பெருமையில்லையென்றது. 4.
1025. இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பா னுடம்பு.
(இ-ள்) சுற்றத்தார் மாட்டு உளதாகிய குறையை மறைக் கக் கருதுவான் உடம்பு, துன்பத்துக்குக் கொள்கலமாம், (எ-று)
மேல் ஒழியாது கருமம் செய்தல் பெருமை என்றார்; அது துன்பமாக்கும் என்றார்க்குத் துன்பத்தற்கு நாணல் ஆகாது, அதனால் புகழாதலான் என்று கூறப்பட்டது. - 5
1025. குடிசெய்வார்க் கில்லை பருவ மடி செய்து
மானங் கருதக் கெடும்
(இ-ள்) குடியோம்புவார்க்கு நன்மை பருவம் இல்லையாம்; தங்குடும்பத்தின் குறையை நினைத்து மடிசெய்தலினாலுளதாகும் குற்றத்தை நினைக்கக் கெடும் ஆதலான், (எ. று).
இது. குடி செய்வார் இன்பநுகர்ச்சியை விரும்பாரென்று மேல் துன்பத்திற்குக் கொள்கலம் ஆக வேண்டும் என்றார்;