பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

麗5

(8) மெய்ப்பொருள் காயஞர்

சேதி நாட்டின் தலைநகராகத் திகழ்வது திருக் கோவலூர். அவ்வூரில் மலயமான் மரபின் வழிவந்த மன்னர் ஒருவர் ஆட்சி புரிந்தார். அவர் சிவனடியார் களின் திருவேடத்தையே மெய்ப்பொருள் எனக் கொண்டு போற்றி வந்தமையால் மெய்ப்பொருள் நாயனர் எனப் பெயர் பெற்ருர். இவ்வரசர்க்குப் பகைவன் முத்த நாதன். இவன் பல முறை படையொடு வந்து எதிர்த்து இவரொடு போர்செய்து தோல்வியுற்ருன்; வஞ்சனை யால் மெய்ப்பொருளாரை வெல்லச் சூழ்ச்சி செய்தான்;

சிவனடியார் வேடம் பூண்டு உடைவாளேப் புத்தகப் பையில் மறைத்துக்கொண்டு மெய்ப்பொருள் நாயனரது அரண்மனையை அடைந்தான். காவலர் தடையை மீறி அரசர் தேவியாருடன் அமர்ந்த இடத்தை யணுகி அரசரை நோக்கி எங்குமில்லாத சிவாகம

நூல் கொண்டுவந்துள்ளேன்' என்ருன். அதனை விரித்து அருள் செய்யும் என அரசர் வேண்ட, அரசியாரை அப் புறம் செல்லும்படி செய்து புத்தகப்பையினே அவிழ்ப்ப வன் போன்று வாளினை எடுத்து முத்தநாதன் முன்னே தான் செய்ய நினைத்த கொடுஞ்செயலேச் செய்து முடித்தான். அதனையறிந்த தத்தன் என்னும் வாயில் காவிலன் முத்தநாதன வெட்டுதற்கு வாளையெடுத் தான். உயிர் பிரியும் நிலையினராகிய மெய்ப்பொரு ளார் தடுத்து நிறுத்தி, தத்தா நமர். இவரை நகருக்கு வெளியே இடையூறின்றி விட்டு வருக என்று பணித்து வீழ்ந்தார். தத்தனும் வஞ்சகனுகிய முத்தநாதனை ஊருக்கு வெளியே அனுப்பிவிட்டு விரைந்து வந்து தெரிவித்தான். அதுவரை உயிர் தாங்கியிருந்த மெய்ப் பொருள் நாயனர் திருநீற்றின்மீதும் சிவவேடத்தின்மீதும் வைத்த அன்பினைப் பாதுகாக்கும்படி யாவர்க்கும் எடுத்துக் கூறித் தில்லைச்சிற்றம்பலவரைப் போற்றிக் சிவப்பேற்றை அடைந்தார்