பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jz

டினை மேற்கொண்டிருந்தார்: ஒருநாள் சிவபெருமான் அமர்நீதி நாயனரின் அடியார் பத்தியினே உலகம் அறிந்து உய்தற்பொருட்டு அந்தணர் குலத்துப் பிரமசாரியாராக அவரையடைந்து தம்மிடமிருந்த கோவணம் ஒன்றன அவரிடம் தந்து நீராடி வருவதாகச் சொல்லிச் சென்ருர்: அமர்நீதியாரும் அவர் தந்த கோவணத்தை வாங்கி வைத்துக்கொண்டார். நீராடச் சென்ற மறையவர் மழையில் நனைந்து வந்து தாம் கொடுத்த கோவணத்தைக் கொண்டுவரும்படி நாயனரைக் கேட்டார். அமர்நீதி நாயனரும் அக்கோவணத்தைப் பாதுகாப்பாக வைத்த விடத்திற்கானது எங்கும் தேடியுங் கிடைக்காமையால் திகைப்புற்ருர். அதனினும் நல்லதாய்ப் புதிய கோவணம் தருவதாகக் கூறினர். அது கேட்ட அந்தணர் சினமுற்று "நான் முன்கொடுத்த கோவணத்திற்கு ஒத்த மற்ருெரு கோவணம் என்பாலுளது; அதற்கு ஒத்த நிறையுள்ள கோவணம் உம்மிடமுள்ளதாயிற் கொடுத்தாற்போதும்: என்ருர். அவர் கூறியபடி நிறைகோல் கொணர்ந்து நிறுத்தி ஒரு தட்டில் அந்தணர்பாலுள்ள கோவணத்தை வைத்து அதற்கு ஈடாகத் தம்பாலுள்ள கோவனம் ஆடை பொன் முதலியவற்றை இட்டும் நிறை ஒவ் வாமையால் தாமும் தம் மனைவியாரும் குழந்தையும் ஆக அத்தட்டில் ஏறி வானுலகம் தொழுது போற்றச் சிவலோகத்தையடைந்து பேரின்ப வாழ்வில் திளைத்து மகிழ்ந்தார்.

(9) எறிபத்த காயளுள்

கொங்கு நாட்டுக் கருவூரில் ஆனிலே என்னுந் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவனே வழிபடும் இயல்பினர்; சிவனடியார்களுக்கு ஓர் இடர் வந்துற்ற விடத்து விரைந்து சென்று உதவும் பண்புடையார்: அடியார்க்குத் தீங்கு புரியும் கொடியோரை எறிந்து தண்டித்தல் வேண்டிக் கையில் பரசு என்னும் மழுப் படையினை ஏந்தியவராதலின் எறிபத்தர் @T@リー

திரு - 2