பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



சிவபெருமானுடன் ஞானமொழி ஒம் என்ற பிரணவ மொழியைத் திருவாய் மலர்ந்தருளும் திருமுகம், ஒன்றும் தன் கீர்த்தியை எடுத்துச் சொல்லும் அடியார்களுடைய தீய வினைகளை நீக்கி அருளுகின்ற திருமுகம் ஒன்றும், கிரெளஞ்சமலை பிளவுபடும்படி ஊடுருவிச் செல்லும்படி வேல்படையைச் செலுத்தி, யாவருங் கண்டு களிக்க நிலைபெற்று நின்ற திருமுகம் ஒன்றும் தன்னைப் பகை கொண்ட சூரபதுமன் முதலிய சூரர்களை கொன்ற திருமுகம் ஒன்றும், வள்ளிக் குறத்தியை திருமணஞ் செய்து கொள்ளும்படி ஏற்பட்டு வந்தருளிய திருமுகம் ஒன்றும் ஆக ஆறு திருமுகங்களைக் கொண்டுடையவராக, மெய்ப்பொருளாகிய தெய்வமே அடியேனுக்குத் திருவருள் செய்தருள வேண்டும்.