பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க்ஷேத்திரக் கோவையாகவும், விநாயகர் துதியாக 5 பாடல்களும் ஆக மொத்தம் 1325 பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களை நாம் கண்டு வணங்க வழிகாட்டும் நூல்கள் பல உள்ளன. இதுபோல் முருகப் பெருமானை அருணகிரியார் பாடிய முக்கியத் தலங்களைக் காண 100 திருப்புகழ் பாடல்களைத் தொகுத்து இந் நூலில் வழங்கியுள்ளோம்.

மேலும் அப்பாடல்களுக்கு மெய்ப் பொருள் தெளிவுரையும் கொடுக்கப்பட்டுள்ள்து.

இந்நூல் இரு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்நூலுக்கு அழகிய மெய்ப்பொருள் தெளிவுரை எழுதித் தந்த புலவர் த. கோவேந்தன் அவர்கட்கு எங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திருவாவடுதுறை ஆதீன வெளியீடான 'முருகன்' நூலில் உள்ள பல படங்களைப் பயன்படுத்தியுள்ளோம். அவர்களுக்கு எங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திருமுருக அன்பர்கள் இந் நூல்களை வாங்கிப் பயன்பெறும்படி வேண்டுகிறோம்.

பதிப்பகத்தார்