பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணத்தில் - வரும் ஊர்கள் பெரிய புராணத்தில் தடுத்தாட்கொண்ட புராணப் பகுதியிலே வரும் ஊர்களைப் பற்றி ஆராய்வதில் சில நய மான செய்திகள் தெரியவரும். . . . . . - தடுத்தாட் கொண்ட புராணம் பல்வேறு ஊர்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. அவ்விதம் விளங் கும் ஒவ்வோர் ஊரும் தத்தமக்கே உரிய தனித் தனிச் சிறப்புக்களைக் கொண்டு காணப்படுகின்றது. திருமுனைப்பாடி நாடு - . . . . . . . . . . . . . . . . . . - திருமுனைப்பாடி நாடு, தடுத்தாட்கொண்ட புராணத் . . . தின் முதல் பாடலிலேயே வந்துவிடுகிறது. மங்கையர் வதன சீத மதிஇரு மருங்கும் ஒடிச் செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப் பாடி நாடு என்று அது விவரிக்கப்படுகின்றது. - - திருகாவலூர் - திருமுனைப்பாடி நாட்டில் காணப்படும் ஊர்களில் ஒன்றே திருநாவலூராகும். தவத்தால் மிக்க வளம்மலி பதி அது. அன்றியும், வாய்மை குன்ருத் திருமறையவர்கள்' வாழ்கின்ற' பகுதியும் ஆகும் அது. " .. ". . . . . . .