பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ፰....fö... 舒扩五、金了 'அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்” (கலி-11) ன்ன இவையிரண்டும் வெண்சீரெனத் தொகுக்கப்படுதலின் வெண்சீரென்னுஞ் சொல்லின் முடியுமிலக்கணத்தான் விதந் தோதாமேயும் அவ்விருபாவிற்கும் உரியவாயின. மற்றுக் கவி மருங்கினென்னாது தளை மருங்கினென்ற தென்னையெனின், இவ்வாராய்ச்சியுடையன கட்டளையடியென்ற தென்பது. எனவே, தளையென்று ஒதுவனவெல்லாங் கட்டளையடியே நோக்குமென்பது பெற்றாம். இங்ங்ணம் வரையறையுடையன கட்டளையடியெனவே, அல்லாத அடிக்கண் ஒழிந்த ஆசிரியவுரிச்சீரும் வருமென்பது பெறுதுமென்பது. மற்றுக் கட்டளையடி யல்லாத ஆசிரியவடியுள் உரியசைமயங்கிய ஆசிரியவுரிச்சீரும் வரு மென்பதுாஉங் கூறுகவெனின், அவை விலக்குண்டது கட்டளை யடிக்காதலின் விலக்காதவழித் தன்சீர் வருதல் விதந்தோத வேண்டாவென்பது முற்கூறியவாறே கொள்க.1 (உச) நச்சினார்க் திரிையம் : இது கட்டளைக்கலிக்கட் சீர்மயங்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) கலித்தளையானாய கலிப்பாவில்வரும் நேரடியிடத்து முற்கூறிய முன்னிரையீற்ற விரண்டுசீர் வருதலும் நீக்கப்படா. - எ- று. உம்மை இறந்தது தழlஇயிற்று.3 "ஓங்குதிரை யடுக்கம்பாய்ந் துயிர்செகுக்குந் துறைவகேள்’’ 'விளங்குமணிப் பசும்பொன்னின் வியலறைமேல் விளையாடி’ 1. தளை என்று விதந்து கூறப்படுவனவெல்லாம் பதினேழ் நிலத்து ஐவகையடிகளாகி எழுத்தெண்ணிக்கொள்ளப்படும் நாற்சீரடிக்கேயுரியனவாதலின் இவ்வாறு எழுத்தெண்ணப்பெறாத சீர்வகையடியாகிய ஆசிரிய அடிக்கண் ஒழிந்த ஆசிரியவுரிச்சீரும் வரும் என்பது தானே பெறப்படும். உரிய ைசமயங்கிய ஆசிரிய வுரிச்சீர்வாரா என விலக்கப்பட்டது எழுத்தெண்ணிக்கொள்ளப்படும் ஆசிரியவடி யாகிய கட்டளையடிக்கேயாதலின், அங்கனம் விலக்கப்படாத சீர்வகையடிக்கண் ஆசிரிய வுரிச்சீராகிய தன்சீர் வருதல் விதந்தோதவேண்டிய இன்றியமையாமையில்லையென்பதாம். 2. நேர்புநிரை நிரைபுநிரை நீடுகொடி, குளிறுபுலி என்னும் இருசீர்கள், 3. ஆசிரியப்பாவிற் கடியப்படாவாதலேயன்றிக் கலிப்பாவிலுங் கடியப்படா என்ற பொருளில் ஆளப்பெற்றமையின் கடியவும் படாஅ என்புழி உம்மை இறந்தது தற்இய எச்சவும்மையாயிற்று.