பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் جزیے ’’قوق کویی (இ-ன்). அவையாவன நூல், உரை, நொடியொடு புணர்ந்த பிசி, ஏது நுதலிய முதுமொழி, மறைமொழி கிளந்த மந்திரம், கூற்றிடைவைத்த குறிப்பு என்னும் அறுவகையுமாம் எ-று. 'நொடியொடு புணர்ந்த பிசி என்பதற்கு நொடிதல் மாத்திரையாகிய பிசி, எனப் பொருள் கொள்வர் பேராசிரியர். நொடியாவது, புனைந்துரை வகையாற் படைத்துக் கூறப்படும். நொடியொடு புணர்ந்த பிசி எனவே பிசிக்கு நிலைக்களம், நொடியென்பது பெறப்படும். பிசியும் முதுமொழியும் மந்திரமும் குறிப்பும் ஆகிய நான்கும் வழக்கு மொழியாகியும் செய்யுள் மொழியாகியும் பயின்று வரு தலால் அவற்றுட் செய்யுளையே கொள்ளுதற்கு அடிவரை. யில்லனவாகிய செய்யுட்களுள் சேர்த்து எண்ணினார். ளகரு. அவற்றுள், நூலெனெப் படுவது துவலுங் காலை முதலும் முடிவும் மாறுகே னின்றித் தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி உண்ணின் ரகன்ற உரையொடு புணர்ந்து* நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே. இளம் பூரணம் : என்-எனின். நூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ஸ்.) நூலென்று சொல்லப்பட்டது எடுத்துக்கொண்ட பொருளொடு முடிக்கும் பொருண்மை மாறுபடாமற் கருதிய பொருளைத் தொகையானும் வகையானுங் காட்டி யதனகத்து நின்றும் விரிந்த வுரையோடு பொருத்த முடைத்தாகி நுண்ணிய தாகி விளக்குவது நூற்கியல்பு என்றவாறு. அகன்றவுரையோடு பொருந்துத லாவது சொல்லாத பொருண்மை யெல்லாம் விரிக்கவேண்டியவழி அதற்கெல்லாம் இடனுண்டாதல். (கருசு) ※中 منار مصاص- ۹۶ تا چ பொருத்தி என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம். 1. இந்நூற்பா முதற்கண் உள்ள 'அவற்றுள் என்னுஞ்சொற்சீரடியின்றி துதலிய பொருளை முதலிற்கூறி: என்பதனை இரண்டாமடியாகப் பெற்று இறையனார் கள்விலு ரையில் மேற்கோளாகக்க ாட்டப்பெற்றுளது.