பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சு சி இந்த இவை விட்டிசைத்தலின் மொழி சிதையாது தனிக்குறில் முதற்கண் நேரசையாயினவாறும் அவை குறினெடிலுங் குறி விணையு மெனப்பட்டு நிரையசை யாகாதவாறுங் கண்டு கொள்க. இனி, விட்டு இசைக்கும் இடந்தான் மூன்றென்பது உரையிற் கொள்க. அவை, அ ஆ விழந்தான்’ எனக் குறிப்பின்கண் வருதலும் 'அ உ வறியா' & 4 எனச் சுட்டின்கண் வருதலும் 'நொ அலையல்’ ான ஏவற்கண் வருதலுமென விட்டிசைக்குமிடந்தான் மூன்றெனப்பட்டது. முதலசிை யென்பது நேரசை யென்பாருமுாைர். அது விதந்தோதல் வேண்டா, தனிக்குறிலான் அசையாமெனப்பட்டது நேரசையே யென்பது பெறுதுமாகலான்.2 மற்றும், 'இ உக்குறுக்கம்' (நேமிநாதம்-5) என்றவழி விட்டிசைத்து மொழி சிதையாதாகலான் அவ்விரண் டெழுத்துங்கூட்டி நேர்பசை யென்னாமோவெனின், அவை பிளவுபட நிற்றலின் இயைந்திலவென மறுக்க.8 (எ) 1 . உரையிற்கொள்ளுதலாவது, உரையிற்கோடல் என்னும் உத்தியாற் கொண்டு விரித்துரைத்தல். அங்ங்ணம் கொள்ளுங்கால் விட்டிசைக்குமிடம் குறிப்பு, சுட்டு, ஏவல் என மூன்றெனப்படும். 2. தணிக்குறில் முதற்கண் மொழிசிதைத்து அசையாகாது’ என இயைத்து இச்சூத்திரத்துக்குப் பொருள் வரைந்தார் பேராசிரியர். 'மொழி சிதைந்து தனிக்குறில் முதலசையாகாது’ என இயைத்து முதலசை என்பதற்கு நேரசை யெனப்பொருள் வரைந்தார் இளம்பூரணர். தனிக்குறிலாகிய அசை நேரசையே யென்பது எல்லார்க்கும் புலனாம் ஆதலால், முதலசை என இயைத்து அதனை நேரசைக்குரிய பெயராகப் பிரித்தோதவேண்டிய இன்றியமையாமையில்லையென்பது பேராசிரியர் கருத்தாகும். ទំនាះ ? என விட்டிசைத்து நின் நிலையில் இ’ என்னும் 5ل iنيين. الإثم j تغيير நேரசையுடன் பின்வரும் 'உ' என்பதனைச் சேர்த்து நேர்பு என்னும் அசை யாகக் கொள்ளக் கூடாதோ என வினவினார்க்கு இ-உ என்னும் அவ்விரண்டும் விட்டிசைத்துப் பிளவுபட நிற்றலால் நேர்பு என ஒற்றுமைப்பட இயைந்து நிற்கும் ஒரசையாகக் கொள்ளுதல் பொருந்தாது என அன்னோர் கூற்றினை tழ் dெ! ) .