தொல்காப்பியம்-பொருளதிகாரம் نیمه
இதுவுந் துணி தீர்ப்பதொரு முறைமை கூறிற்று.
- * g irrifau னெங்கூந்தல் கொள்வா னிதுவுமோர்
ஊராண்மைக் கொத்த படிறுடைத் தெம்மனை வாரல்நீ வந்தாங்கே மாறு’ (கலி, 8.9)
என வலிந்து சென்றதனைத் தலைவி கூறியவழி,
'ஏள, இவை, ஒருயிர்ப் புள்ளின் இருதலை யுள்ளொன்று
போரெதிர்த் தற்றாப் புலவல்நீ கூறினென் ஆருயிர் நிற்குமா றியாது' (கலி. 89)
என ஆற்றாமை மிகுதியாற் சென்றமை கூறியவாறு காண்க.
கைவிடின் அச்சமும் - தலைவி தான் உணர்த்தவும் உண ராமல் தன்னைக் கைவிட்டுப் பிரியில் தான் அவளை நீங்கு தற்கு அஞ்சிய அச்சத்தின் கண்ணும் : தலைவற்குக் கூற்று நிகழும்.
அஃது உணர்ப்புவயின் வாரா வூடலாம்.
'எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்று இண்ைமதி வாழிய நெஞ்சே மனைமரத் தெல்லுறு மெளவல் நாதும் பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே. ’’ (குறுந்.19)
இதனுள் அவளையின்றி வருந்துகின்ற நெஞ்சே அவள் தமக்கு யாரெனப் புலத்தலன்றி ஆண்டுநின்றும் பெயர்தல் கூறாமையிற் கைவிடின் அச்சமாயிற்று.
தான் அவட் பிழைத்த நிலையின் கண்ணும் - தலைவன் தலைவியைப் பிழைத்த பிரிவின்கண்ணும் : -
பிழைத்த வென்றார் ஆசிரியர், இயற்கைப்புணர்ச்சி தொடங்கிப் பலகாலும் பிரியேனெனத் தெளிவித்ததனைத் தப்பலின்,
'அன்புமடனுஞ் ............... நினைந்தே. , {அகம். 225) இது நெஞ்சினாற் பிரியக் கருதி வருந்திக் கூறியது.
'வயங்கு மணிபொருத' என்பதும் அது. {அகம், 186)