பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 (இ-ள்) உம்மையால் வரும் எண்ணும் எனவால் வரும் எண்ணும் தத்தம் இறுதிக்கண் தொகைச்சொற்பெறுதலே முறை மையாக வுடைய அல்ல. எ-று. எனவே தொகை பெற்றும் பெருதும் வரும் என்பதாம். (உ-ம்). உயர்திணக்குரிமையும் அஃறிணைக்குரிமையும் ஆயிருதினேக்கும் ஒரன்ன வுரிமையும் அம்முவுருபின? என வும் இசையினுங் குறிப்பினும் பண்பினும் தோன்றி எனவும் உம்மையெண் தொகைபெற்றும் பெருதும் வந்தது. நிலனென நீரெனத் தீயென வளியென நான்கும். எனவும் உயிரென உடலென இன்றியமையா?? எனவும் எனவெண் தொகை பெற்றும் பெருதும் வந்தது. தொகை எனப் பொதுப்படக் கூறியதல்ை எண்ணுப்பெயரே யன்றி எஞ்சாமைப் பொருளில் வரும் அனைத்தும் எல்லாம் என்னுந் தொடக்கத்தனவும் தொகையாகக் கொள்ளப்படும். உ.அ.அ. எண்ணே கார மிடையிட்டுக் கொளினும் எண்ணுக்குறித் தியலு மென்மனர் புலவர். இஃது எண்ணிடத்து வருவதோர் வழுவமைக்கின்றது. (இ-ள்) எண்ணுதற் பொருளில் வரும் ஏகாரம் (எண்ணும் பொருள் தோறும் வாராது) இடையிட்டு வந்தாலும் (பொருள் தோறும் இயைந்து) எண்ணுதற் பொருளதாம். எ-று. (உ-ம்) மலே நிலம் பூவே துலாக் கோலென்றின்னர்? எனவும், தோற்றம் இசையே நாற்றஞ் சுவையே, யுறலோ டாங்கைம் புலனென மொழிப? எனவும் எண்ணேகாரம் இடை யிட்டு வந்ததாயினும், மலேயே நிலமே பூவே துலாக்கோலே என்று இன்னர்? என எண்ணப்படும் பொருள் தோறுஞ் சென் றியைந்து எண்ணுதற்பொருள் தந்தவாறு கண்டு கொள்க. உஅக.ை உம்மை தொக்க வெனவென் கிளவியும் ஆவி ருகிய வென்றென் கிளவியும் ஆயிரு கிளவியும் எண்ணுவழிப் பட்டன. இஃது எண்ணின் கண் வருவனசில இடைச்சொல் உணர்த்து கின்றது .