பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா உஉ 2. 37డి

பரவற்கண் வந்த செந்துறைப் பாடாண்பாட்டு; இதனை வாழ்த்தியலென்பர்.

'வரைபுரையு மழகளிற்றின்மிசை (புறம்--அ) இது புகழ்ச்சிக்கண் வந்த செந்துறைப்பாடாண்பாட்டு. இயை பியன்மொழி யென்பதும் அது.

'உண்டா லம்மவிவ் வுலகம்............ தமக்கென முயலா நோன்தாட் பிறர்க்கென முயலுந ருண்மை யானே.” (புறம்-க அஉ}

இது வகைபட முன்னோர் கூறிய குறிப்பின்கண் வந்த செந்துறைப் பாடாண்பாட்டு.

இது முனிவர் கூறுமாறு போலக் கூறிப் பரவலும் புகழ்ச்சியுங் கூறாது மறுமைப்பயன் பிறர்க்குறுதி பயப்பக் கூறலிற் கைக்கிளைப் புறனாய்ப் பர்டாணாயிற்று.

இவை செந்துறை மார்க்கத்து வண்ணப்பகுதியாகிய பாடல் பற்றி வருமென்பது உம் வெண்டுறை மார்க்கமாகிய நாடகத்துள் அவிநயத்துக் குரியவாகி வருமென்பது உங் கூறின், அவை "ஈண்டுக் கூறல் மயங்கக் கூறலாம். அன்றியும் ஏனை அறுவகைத் திணைக் கும் இங்ங்னங் கூறாது இத் திணைக்கே உரித்தாகக் கூறுதற்கொரு காரணமின்மையானும் அங்ங்னங் கூறாரென்ப. பரவலும் புகழ்ச்சி யும் அவ்வப் பொருண்மை கருதினாரைத் தலைவராக வுடைமை யானும், ஏனையது அக்குறிப்பிற்றன் றாகலானும், அதற்குப் பாட்டுடைத் தலைவர் பலராயினும் ஒருவராயினும் பெயர் கொடுத்துங் கொடாதுங் கூறலானும் வேறு வைத்தாரென்க’ இத்துணை வேறுபாடுடைய தனைப் பரவல் புகழ்ச்சியோடு கூட வைத்தார், அவை முன்னோர் கூறிய குறிப்பினுள்ளும் விராய் வரும் என்றற்கு. இன்னும் அதனானே பாடாண்டிணைப் பொருண்மை மயங்கிவரினும் முடிந்த பொருளாற் பெயர்பெறு மென்று கொள்க.

'நிலமிசை வாழ்நர் என்னும் (சங்) புறப்பாட்டுப் புலவன் அரசனை வைதுஆறி அது நன்குரைத்தல். அ.து இயற்கை வகையானன்றிச் செயற்கை வகையாற் பரவலும் புகழ்ச்சியுந் தொடர்ந்த முன்னோர் கூறிய குறிப்பு.

இன்னும் மயங்கி வருவனவெல்லாம்,இதனான் அமைக்க.(உ.எ)

(பாடல் 1. இரண்டுங்கூறல்”