பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திண்ையியல் நூற்பா 1-0 妒。兹。蕊

உதாரணம் :

"அந்தண ராவொடு பொன் பெற்றார் நாவலர் மந்திசம்போன் மாண்ட களிறுார்ந்தா -செந்தை யிலங்கிலைவேற் கிள்ளி யிரேவதி நா ளென்னோ சிலம்பிதன் கூடிழந்த வாறு.'

(முத்தொள்ளாயிரம்-அஉ}

இது சிலம்பி கூடிழக்குந்துணை அடங்கலும் வெளியாயிற் றென்றலின் வெள்ளணியாயிற்று.

"செய்கை யரிய களவழிப்பா முன்செய்த பொய்கை யொருவனாற் போந்தரமோ-சைய மலைச்சிறைதிர் வாட்கண்டன் வெள்ளணிநாள் வாழ்த்திக் கொலைச்சிறைதீர் வேந்துக் குழாம்.’’

இது சிறைவிடுதல் கூறிற்று.

"கண்ணார் கதவத் திறமின் களிறொடுதேர் பண்ணார் தடைப்புரவி பண்விடுமின்-நண்ணாதீர் தேர்வேந்தன் றென்னன் றிருவுத் திராடநாட் போர்வேந்தன் பூச லிலன்.' (முத்தொள்ளாயிரம்-எ)

இது செருவொழிந்தது.

'ஏமாரு மன்னி ரெயிறிறமி னெங்கோமான் வாமான்றேர்க் கோதை சதய நா-ளாமாறு காம நுகருமின் கண்படுமி னென்னுமே யேம முரசின் குரல்’’

இதனுள் இழிகுலத்தோன் பறைசாற்றினமை கூறுதலின் இழிந்தோர் கூறுதல் ஒழிந்த மங்கலங்கட்கும் ஒக்கும். பெரு மங்கல மென்றதனானே பக்கநாளுந் திங்கடோறும் வரும் பிறந்த நாளும் பாடலுட் பயிலாமை யுணர்க.

சிறந்த சீர்த்தி மண்ணும் மங்கலமும்-அரசர்க்குச் சிறப் பெய்திய மிக்க புகழை எய்துவிக்கும் முடிபுனைந்து ஆடும் நீராட்டு மங்கலமும்.

இதனைப் பிறந்தநாளின் பின்வைத்தார் பொன்முடி புனைந்த ஞான்று தொடங்கி யாண்டுதோறும் இது வருமென் றற்கு குறுநில மன்னர்க்காயின் அவர்க்குரிய பட்டத்தோடு கூடிய மண்ணு மங்கலமுங் கொள்க.