பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



உலகம் புகழும் நோபல் பரிசைப் பெற்ற தமிழ்நாட்டு விஞ்ஞானி சர்.சி.வி. இராமன் 1948-ஆம் ஆண்டில் எழுதிய கடிதம் இது:

பாராட்டிய கடிதங்கள்!
37 ஆயிரங்களாகும்!

திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் இயற்கைப் படைப்பில் புரட்சிகரமான மாற்றங்களைச் செய்துள்ளார். அவர் கையாளும் முறைகள் புதுமையானவை.

நம் நம்பிக்கையைத் தகர்க்கக்கூடிய, இராட்சசச் செடிகளை அவர் உண்டாக்கி இருக்கிறார். அத்தகைய இரண்டு செடிகளான சோளம், பருத்தி ஆகியவற்றின் முன் நான் நிற்கும்போது புகைப்படம் எடுத்திருக்கிறார்கள்.

செடிகளில் உள்ள இந்த மாபெரும் மாறுதல், அவர் செலுத்திய மருந்தின் பயன் ஆகும். அவருடைய பசுமையான அறிவும், ஆராய்ச்சியும் மனித இனத்துக்குப் பெரிதும் நன்மை பயக்கக் கூடியவை.

உணவுக்கு வறுமைப்பட்ட இந்த நாட்டிற்கு அவர் காட்டி யுள்ள வழி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஜி.டி.நாயுடு அவர்களின் விவசாய முறை உலகெங்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

இலண்டன் மாநகரிலே உள்ள ஆராய்ச்சிக் கழகத்தில் பணியாற்றுபவர் டாக்டர் ஜானகி, அவர், 1.1.49ஆம் ஆண்டில் எழுதிய பாராட்டுக் கடிதம் இது :

திரு. ஜி.டி. நாயுடு அவர்களது புதிய ஆராய்ச்சிகளை நான் பாராட்டிப் போற்றுகிறேன். அவருடைய விஞ்ஞான சோதனைகளின் வெற்றிகளை மேலும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். திரு. நாயுடு பெயர் மனித குல வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை.

பம்பாய் நகரிலே வாழ்ந்த எஸ். இராதா கிருஷ்ணன் என்பவர் 12.5.48 அன்று எழுதிய கடிதம் இது.