பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

189



ஆனால், மேலை நாட்டாரிடம் நாம் கற்க வேண்டியதை விட்டு விட்டு, நமது பண்பாட்டுக்கு ஒத்துவராத வகையில் அவர்கள் நாகரிகத்தை ஏற்று தீமை தரும் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விட்டோம். இது மிகவும் வருத்தப்படக்கூடிய வாழ்க்கை நிலை.

நான் மேல் நாடுகளுக்குச் சென்ற போதெல்லாம் ஒரு குறிப்பு எழுதி, அதைக் கவனமாக எனது கோட்டு அங்கியில் வைத்துக் கொள்வேன். No Women, No, Alcohol, No Meat என்று கொட்டை எழுத்துகளால் எழுதி வைத்திருப்பேன்.

நான் தினந்தோறும் படுக்கச் செல்லும்போது, கோட்டுப் பைக்குள்ளே வைத்திருக்கும் அந்த அறிவுரைக் குறிப்பை எடுத்து. பலமுறை அதை வாய்விட்டு அறவுரையாக எண்ணி முணுமுணுத்து, நானே சொல்லிக் கொள்வேன். இவ்வாறு நான் கூறிக் கொள்வதானது, எனக்கு மனவுறுதியை வெகுவாகப் பலப் படுத்தியது.

நான் ஒரு குறிக்கோளோடு வாழ்ந்தேன். எனது எண்ணங்களையும், சக்திகளையும் எதிலும் சிதறவிடாமல் என்னையே நான் தற்காத்துக் கொண்டேன்.

சுவையான, இனிமையான நிகழ்ச்சி ஒன்று எனது நினைவுள் தோன்றுகின்றது. சிகாகோ நகரத்தில் ஒரு நாள் என்னை மூன்று பெண்கள் சூழ்ந்து கொண்டு பலாத்காரம் செய்தார்கள். அந்த இடத்திலே எனது அறவுரைகளும், அறிவுரைகளும் பலன் தரவில்லை. அவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டேன்.

ஏன் தெரியுமா? அவர்கள் ஒவ்வொருவரும் அளவுக்கு மீறி மதுவைக் குடித்திருந்தார்கள். அதனால், அவர்களுக்குத் தாம் என்ன செய்கிறோம் என்றே புரியவில்லை; தெரியவில்லை. அறிவை இழந்த அந்த அழகிகளைச் சீர்படுத்தி அந்த இரவு முழுவதும் எனது அறையிலேயே தங்க வைத்தேன்.

மனதில் ஒழுக்க
உறுதி வேண்டும்!

மறுநாள் அந்த மங்கையர் மூவரும், தங்களது செயல்களுக்காக என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு