பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

சட்டத்தாற் செய்தபல தண்டனைகள் சந்தர்ப்பக் கட்டத்தால் அன்றிமற்ற காலமெல்லாம் மன்னிப்பும் இட்டத்தால் செய்துவக்கு மின்னருளும் மேலெனமுத் திட்டத்தால் ஆட்சிமுறை சீர்க்கவைத்த தேற்கேமோ! செல்வநபி நாயகமே சீர்க்கவைத்த தேற்கேமோ!

77

‘பெண்டுபிள்ளை சுற்றமொடு பேசுபொரு ளத்தனையும் கொண்டுவறி யோர்க்குதவிக் கூண்டவிருந் தோம்பியின்சொல் விண்டுமகிழ் வாழ்வுலது வெய்யசன்னி யாசநெறி கண்டுவத்தல் தீய’தெனக் காட்டியதும் வேட்டேமோ கருணைநபி நாயகமே காட்டியதும் வேட்டேமோ!

78

‘பொய்யென்று நீஉரைத்த போதனைகள் யாவும்உருட்(டு) உய்ய்அதில் ஒன்றுமில்லை ஒர்க’ என ஒதும்அவற்(கு) 'ஐய,தெய்வம் ஒன்றவன்றன் ஆதிநபி யான்உணரிற் செய்யசொர்க்கம் எய்வை‘என செப்புமுண்மை தப்பேயோ செல்வநபி நாயகமே செப்புமுண்மை தப்பேயோ!