பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10



காலித் இப்னு வலீத்-குறைஷிக் குடும்பத்தினர். உஹத் போரில் போர் புரிந்தார். பின்னர், மதீனா சென்று பெருமானார் அவர்களின் கரம் பற்றி இஸ்லாமாகி, மன்னிப்புப் பெற்று, அயல் நாடுகளுக்குத் தலைமை வகித்துச் சென்று வெற்றி பெற்றார். போரைத் தவிர வேறு எதிலுமே கவனம் செலுத்தாதவர்.

ஸபிய்யா நாச்சியார் - நாயகம் அவர்களின் மாமி: ஹம்ஸாவின் தங்கை.

ஸஅத் இப்னு முஆத்-இவர் மதீனாவில் ஒளஸ் கோத்திரத் தலைவர். இஸ்லாத்தைத் தழுவியவர்.யூதர்களுடைய துரோகத்துக்கு வருந்தி, அவர்களுடைய வேதக் கட்டளைையை அனுசரித்து, சமாதானத் தீர்ப்பு வழங்கினார்.

ஸபிஃய்யா-இவர் தந்தை யூதக் கிளையின் தலைவர். கைபர் போரில் இவருடைய தந்தையும் கணவரும் இறந்தனர். ஆதரவற்று இருந்த இவரை, பெருமானார் மணந்து கொண்டனர். இதனால், யூதர்களின் பகைமை மாறும் எனக் கருதினார்கள்.

ஸல்மான் பார்ஸி-இவருடைய தந்தை அக்னியை வணங்குபவர். அவர் கிறிஸ்துவ வணக்க முறையால் கவரப்பட்டார். கிறிஸ்துவப் பாதிரி ஆதரவில் இருந்தார். அவர் இறந்ததும், அவர் கூறியபடி நபிகள் நாயகத்தைத் தேடி வந்தார். வழியில் கல்பிக் கூட்டத்தினர் இவரை, ஒர் யூதரிடம் அடிமையாக விற்று விட்டனர். 300 பேரீச்சம் நாற்றுகளையும், 40 அவுன்ஸ் தங்கத்தையும் பெருமானார் கொடுத்து இவரை மீட்டனர். அகழ்ப் போரில் இவருடைய ஆலோசனைப்படியே அகழ் வெட்டினர். பெருமானார்க்கு இவரிடம் பிரியம் அதிகம்.

ஸைனப் பின்த் ஜஹ்ஷ்-இவர் பெருமானார் அவர்களின் மாமி மகள்: (அதாவது அப்துல் முத்தலிபின் பேத்தி) அடிமையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஸைதுக்குப் பெருமானார் இவரை மணம் செய்து வைத்தனர். ஓர் ஆண்டுக்குப் பின், இவர்கள் மணவாழ்க்கை இன்பகரமாக இல்லாததால், மண விலக்குச் செய்து கொண்டனர். அதன்பின், ஸைனபைப் பெருமானார் அவர்கள் மணந்து கொண்டனர்.