14 ார்வகிபாய் அதவலே இவர் மாதம் 150 ரூபாய்களுக்குக் குறையாமல் பொருள் ஈட்டிவந்தார். அந்தக் காலத்தில் 150 ரூபாய் என்பது ஒரு பெரிய தொகை ஆகும். அத் தொகையில் இவர் மிகச் சிக்கனமாகச் செலவு செய்து தம் குடும்பத் தைக் காப்பாற்றிக்கொண்டு, தம்மால் இயன்ற அறச்செயல்களையும் அவ்வப்போது புரிந்து, சிறிது சேமித்தும் வரலாயினர். பார்வதிபாய் அம்மையாரின் தமையனராய நரஹரி பாலகிருஷ்ன ஜோஷி என்பவரும் 5ம் பெரியாரும் உயர்நிலைப்பள்ளியிலும் கல்லூரியிலும் ஒரு சாலேமானுக்க ராய் இருந்துவந்தனர். அன் றியும், இவர்கள் இணைபிரிய நண்பர்களா யிருந்தார்கள். ஜோஷிக்கும் இளமையிலேயே திருமணம் ஆகியிருந்தது. ஆதலின் இவ் விருகுடும்பத்தினரும் ஒரே வீட்டில் ஒருகுடும்பமாகவே இருந்து வாழ்ந்துவந்தனர். . கம் பெரியார் கார்வே பல மானுக்கர்களைத் தம் இல்லத்தில் வைத்திருந்து அவர்களுக்குப் பாடம் கற்பித்ததோடு அவ்வப்போது வேண்டிய பொருளும் உதவி, அவர்களே முன்னுக்குக் கொண்டுவந்துள்ளார். இவருடைய மாமன் புதல்வரும் தற்போது பேரும் புகழும் பெற்று விளங்குபவருமாகிய டாக்டர், ஆர். பி. பரஞ்ஜ்பை என்பவர் அவர்களுள் ஒருவர். பெரியார் கார்வே பம்பாயில் இருந்தபோது, மூருட் பதியிலிருந்து பல அன்பர்கள் அங்கே உத்தி யோகத்தின் கிமித்தம் வந்து தங்கி:யிருந்தனர். தம் பெரியார் அவர்களேயெல்லாம் ஒருங்கு சேர்த்து அவர்களிடமிருந்து பணம் திரட்டி மூருட் கிதி' எனத் தொகுத்து அந்த கிதியைக்கொண்டு தம் ஊருக்